tag:blogger.com,1999:blog-297497472024-03-07T21:26:15.226+05:30இதழ்கள்கொஞ்சம் கவிதைகள்,நிறைய கனவுகள்Unknownnoreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-29749747.post-16943167319745354052015-08-09T06:22:00.000+05:302015-08-09T06:22:17.370+05:30காலங்களை கடப்பவள்..புதிய நாட்காட்டியின் தாள்களை <br /> ஒவ்வொன்றாய் கிழித்துக்கொண்டிருந்த குழந்தை<br /> இன்றை கடந்து நாளைகளை கிழிக்கத்துவங்கியதும்<br /> மெல்ல புன்னகைக்கிறாள்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29749747.post-10571112077863500312015-08-09T06:15:00.001+05:302015-08-09T06:15:31.685+05:30மாற்றம்அமரர்களாகவே நிலைத்திடவேண்டி<br /> தேவர்கள் துவங்கிய யாகத்தில்<br /> செங்கற்கள் அடுக்கி விறகுகள் குவித்து<br /> மாவிலையால் நெய் ஊற்றி<br /> ஓங்கி வளர்ந்த அக்னிதேவனுக்கு<span class="text_exposed_show"><br /> ஒரு சீப்பு வாழைப்பழத்தையும்<br /> பட்டுப் புடவையொன்றையும் <br /> லாவகமாய் படைத்த நொடியில்<br /> தேவர்கள் அசுரர்களாக மாறிவிட்டார்கள்.</span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29749747.post-54497344474321943062013-11-07T21:11:00.001+05:302013-11-07T21:11:22.585+05:30விலகல்<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3,"tn":"K"}"><span class="userContent">எதிர்பாராத வேளையில் <br /> பரணிலிருந்து விழுந்தது <br /> அந்த பச்சை தோல் பை <br /> <br /> தேடிய காலத்தில் எல்லாம் கிடைக்கவில்லை.<br /> <br /> கோபம் கண்ணடைத்த ஒரு நாளில்<br /> தரை தெறிக்க வீசியது <br /> கடைசியாய் நினைவிலிருக்கிறது.<br /> <br /> அதற்கு முன் என் கையோடு கையாய் <br /> அத்தனை பூரிப்பாய் <br /> அடங்கா கர்வியாய் <br /> கூடவே தான் இருந்தது.<br /> <br /> என் இயலாமைகளையும் <br /> அச்சங்களையும் <br /> அடர் மழை நாளொன்றின் தீராத வெறுமையையும் <br /> பார்த்திருக்கும் அதனிடம் <br /> எப்படி சொல்வது <br /> பூரண வாழ்வு பெரு மகிழ் நாட்களென்று..<br /> <br /> பூஞ்சை படர்ந்து கனத்திருக்கும் அதை <br /> உற்றுப் பார்த்தபடியே நின்றிருந்தேன் <br /> சரி இருக்கட்டுமென <br /> தானாக நடந்துச் சென்று <br /> அலமாரியின் கீழ் தட்டில் <br /> படுத்துக்கொண்டது.<br /> <br /> -அனிதா</span></span></h5>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29749747.post-92157187112759796152013-03-04T00:26:00.001+05:302013-03-04T09:10:58.836+05:30அதுவே கடைசிகிளைகள் பரப்பிய பெருமரமாகத்தான்
அறிந்திருந்தேன்<br />
அத்தனை வளமாய்<br />
பேராதிக்கமாய்<br />
சலனமற்ற பார்வையோடு<br />
கடந்துவிடமுடியாதபடியாய்.<br />
<br />
இப்பொழுதும்<br />
அங்கேயேதான் இருக்கிறது மரம்<br />
எனினும் கடைசி பறவை<br />
தன் கூட்டை சுமந்தபடி
பறந்துச்சென்று<br />
நாளாகிறது.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29749747.post-33991371105078033882013-03-04T00:24:00.002+05:302013-03-04T09:10:05.677+05:30நீபருக தணியாத தாகம்<br />
இறைக்கத் தீராத நீர்<br />
கண்கள் கொள்ளாத ஆழ்கடல்<br />
அள்ளி குறையாத கைமணல்<br />
நினைத்து சலிக்காத காதல்<br />
தீராத்தேடல்<br />
உன் பிரியம்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29749747.post-51911555129588351242013-03-04T00:22:00.004+05:302013-03-04T09:09:22.053+05:30வாசம்நான் தூங்கிட்டேம்மா<br />
இருளில் கன்னம் தடவுகிறாள் மகள்<br />
உறங்கும் குழந்தைக்கு வாசமிருக்கிறது<br />
இறைந்து விழுந்தோடும் அருவியின் வாசம்<br />
குளிர் காய எரியும் மென் தீயின் வாசம்<br />
தூறல் புகைத்த செம்மண் வாசம்<br />
போலவே தீர்க்கமானது<br />
உறங்கும் குழந்தையின் வாசம்<br />
அம்மாவுக்கு தெரியும் நீ தூங்கவில்லை என்றதும்<br />
சிரித்தபடியே உறங்கிப்போகிறாள்<br />
கணங்கள் நகர்த்தாமல் விழித்துக்கிடக்கும் என்னை<br />
தலை தடவி உறங்கச்செய்கிறது கடவுள்.<br />
நான் அறியுமுன்னே<br />
அறையெங்கும் பரவியிருக்கிறது
அனிச்சைவாசம்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29749747.post-72422217993893444672012-10-05T09:59:00.001+05:302012-10-05T09:59:15.170+05:30அம்மாவும் நானும் - கொடுத்துச்சென்றதும் பறித்துக்கொண்டதும்..
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-lp0zfpSA27_ik5sLS3h8VSct14sacsYm8Lu7eITpmLNUFBmdJ2SxQJir9JFAUgtIhKSKYgsN7-8Ibs6B_wu1aNjnf1e4vEhh0hm3Oc1Ukl0oDJPfigByK8JmpQRlIAvnPJ71gw/s1600/momdad.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="192" width="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-lp0zfpSA27_ik5sLS3h8VSct14sacsYm8Lu7eITpmLNUFBmdJ2SxQJir9JFAUgtIhKSKYgsN7-8Ibs6B_wu1aNjnf1e4vEhh0hm3Oc1Ukl0oDJPfigByK8JmpQRlIAvnPJ71gw/s200/momdad.jpg" /></a></div>
சில ஆண்டுகளுக்கு முன் இதே நாள் தான் அம்மா என்னை பிரிந்துச்சென்றாள்.
வாழ்வை எப்படி ஜெயிப்பது என்பதை விடவும் வாழ்வை ரசித்து ரசித்து எப்படி வாழ்வதென்று கற்றுக்கொடுத்தாள்.
அழகி. பெரிய கண்கள், அதற்கு மேல் பெரிய கண்ணாடி, நிமிர்ந்த நடை என பாலசந்தர் கதாநாயகி போல இருப்பாள்.
பாடத்தை கஷ்டப்பட்டு படிக்காதே.. உச்சி வெயிலில் நெடுந்தூரம் நடந்து வந்தபின் ஒரு மண் பானையின் குளிர் நீரை எத்தனை ஆசையோடு மிடறு மிடறாய் அருந்துவாயோ.. அத்தனை ஆசையாய் படி என்பாள்.
”ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிற” தாம்டி.. எத்தனை அழகான வரிகள் பாரேன் என்பாள்.. வார்த்தைகளை தேடித்தேடி ரசித்தாள். ரசிக்க கற்றுக் கொடுத்தாள்.
சினிமா போக மாட்டாள். டீவி பார்க்க மாட்டாள். பாடல்கள் மட்டும் கேட்பாள். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பாள்.. என் கணக்கு புத்தகத்தை வைத்துக்கொண்டு இது என்னடி ஈகுவேஷன்.. புரியல என்பாள்..
திண்டிவனம் பக்கத்தில் கோவிந்தாபுரத்தில் பிறந்து, பள்ளியிலேயே முதல் மாணவியாய் தேர்ச்சிப்பெற்று ஸ்டெல்லா மேரீஸிலும் குயீன் மேரீஸிலும் பட்டம் படித்து Railway Protection Force ல் Superintendentஆக பணியாற்றினாள்.
கல்யாணம் ஆனப்புறம் புருஷன்கிட்ட ரொம்ப அன்பா இருக்கணும். சண்டையெல்லாம் போடக்கூடாது. நிதானமா இருக்கணும் என்பாள்.. அப்படி நிதானிக்க எத்தனை மனமுதிர்ச்சியும் பக்குவமும் தேவைப்படுகிறது என்று இப்போது தெரிகிறது..
உன் கணவன் உன்னை கைக்குள் வைத்துத் தாங்கினாலும், நீ பெரிய கோடீஸ்வரியாக ஆகிவிட்டாலும் வேலைய விட்டுடாதே என்பாள். அப்போது எனக்கு இருபத்துமூன்று வயது. அம்மா இறக்கபோகும் தருவாயில் அப்பாவிடம் சிலர் “அவங்க இப்பவே VR வாங்கிட்டாங்கன்னா உங்களுக்கு பத்து லட்சத்துகிட்ட கிடைக்கும். இல்லன்னா ஒண்ணோ ரெண்டோ தான் என்றார்கள்” வேலை அவளோட பெரிய சந்தோஷம். அவ கடைசி வரைக்கும் வேலைல இருக்கணும் என்றுவிட்டார்.
எக்கசக்க தைரியசாலி அம்மா.. ஒரு முறை ரயில் பயணத்தின்போது மேல் பர்த்திலிருந்து சீண்டிய ஒருவனை காலரை கொத்தாக இழுத்து தரையில் போட்டாள். பிறகுதான் அப்பாவுக்கே சொன்னாள். அடுத்த நிறுத்ததில் ரயில்வே போலீஸ் வந்து அவனை இறக்கிச்சென்றபின் சலனமே இல்லாமல் தூங்கப்போனாள்.
தங்கத்தின்மேல் துளி கூட ஆர்வமில்லை அம்மாவுக்கு. அவளோடு இருந்த இருபத்துமூன்று வருடங்களில் மூன்றோ நான்கோ முறை தான் நகை வாங்கி பார்த்தேன். செடி வளர்த்து முதல் துளிர் விடுகையில் அந்த வெளிர் பச்சையை அழைத்துக் காட்டுவாள்.. ரோஜா செடி வளர்த்து அந்த பூவை பறித்து வைத்துக்கொண்டு அலுவலகம் ஓடுவாள்..
நிறைய கவிதைகள் எழுதினாள். நிறைய பரிசுகள் வாங்கினாள். அவளை பிடிக்காதவர்கள் யாராவது இருந்திருப்பார்களா தெரியவில்லை.
அம்மா இறந்த தினம் ஹால் கொள்ளவில்லை. அறைகள் கொள்ளவில்லை. தெருவே கொள்ளவில்லை. ஆயிரத்திற்கும் மேல் மக்கள்.. கடைசி வரை கலையவில்லை. என் வயசுக்கு இத்தனை ஜனம் பாக்கலடி நான் என்றாள் ஈபீ மாமி. இந்த நிமிடம் வரை பிரேமா பொண்ணு நீ.. அந்த நினைப்போட அவளை மாதிரியே இருக்கணும் நீ என்று நெஞ்சு கனக்க தொண்டை கமர யார் யாரோ சொல்கிறார்கள். இத்தனை ஸ்நேகம் எப்படி வளர்த்தாள்.. எல்லோருக்கும் பிடித்தமாய் எப்படி இருந்தாள்.. நான் மரித்தால் இத்தனை பேர் வருவார்களா என்றெல்லாம் நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்..
அவளைப்போலவே அவள் மரணம் நிறைய கற்றுக்கொடுத்தது.. நிறைய துக்கம். பின் நிறைய தெளிவு..
அம்மா கூடவேதான் இருக்கிறாள். என்ன.. அவள் விதவிதமாய் காட்டன் புடவை கட்டும்போது காலடி புடவை நுனியில் மடிப்பு படியவைத்து அழுத்தி சரிசெய்யும் பாக்கியத்தை தான் பறித்துக்கொண்டுவிட்டாள்..
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29749747.post-45424297883958863542012-07-28T10:05:00.000+05:302012-07-28T10:06:12.089+05:30இன்று பெங்களூருவில் மழை..<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguo5B5LTPcj3rYO9_M2NhW0hWa_-zSb6hcY5uIwu0FmMUz8NZAA0zNkmnkI03pY15bX3zSbWztoAdbHnykDKK3TxwC2OoBPSGSv1jqd3Z7xyRdytJPURhXFNC6gEhsyqosR2jgkg/s1600/Mohammad-Arif-Alis-photog-001542210.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="120" width="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguo5B5LTPcj3rYO9_M2NhW0hWa_-zSb6hcY5uIwu0FmMUz8NZAA0zNkmnkI03pY15bX3zSbWztoAdbHnykDKK3TxwC2OoBPSGSv1jqd3Z7xyRdytJPURhXFNC6gEhsyqosR2jgkg/s200/Mohammad-Arif-Alis-photog-001542210.jpg" /></a></div>
லேசான தூறலாகத்தான் துவங்கியது.. எட்டி பிடிக்கிற தூரம் தானே என்று கிளம்பிவிட்டேன். தூறலில் வண்டி ஓட்டுவது எத்தனை பெரிய விடுபடல்.. நம்மிலிருந்தே.. நானிலிருந்தே.. இந்த பாழாய் போன வெள்ளை சட்டை போலிஸுக்காக ஹெல்மெட் போடவேண்டியாயிற்று.. இருந்தாலும் பெங்களூருவில் தூறலில் வண்டி ஓட்டுவது அடிக்கடி நிகழ்வது.. தவிர்க்க நினைப்பவர்கள் கூட முடியாது.. ஏதாவது இளையராஜா பாடலோ பழைய ஹிந்தி கம்போஸிங்கோ நாக்கின் நுனியில் தன்னனனாவாகவோ ம்ம்ம்வாகவோ வந்து அமர்ந்துகொண்டுவிட்டால் அந்த தூறல் பொழுது இன்னும் கோலாகலமாகிவிடுகிறது.. இன்று மதியமே இத்தனை மந்தமான மேகங்கள் கவிந்திருந்தன.. ஒரு பரபரப்பான நகரத்தின் எந்த நேரத்திலும் பெரும் மழையில் வசமிழந்து நனைவது முடிவதே இல்லை. ஏதோவொரு அச்சம் இருக்கவே செய்கிறது.. என்ன நினைப்பார்களோ என்று.. நினைப்பவர்கள் யார்? எதுவரை கூடவருவார்கள் என்று இன்னும் கொஞ்சம் யோசித்தால் சிரிப்பு வந்துவிடுகிறது. இருந்தும் தயக்கம் முழுக்க அகலுவதில்லை. ஒரு பெருமழைநாளின் இருண்ட பொழுதில் அம்மாவோடு தண்ணீர் சொட்டச் சொட்ட அரை கி.மீ நடந்ததும், கெண்டைக்கால் மூழ்கிவிட்ட நீரில் இன்னும் இன்னும் நடந்துக்கொண்டேயிருக்க நினைத்ததும் என் பதினைந்து வயதில். எத்தனை துடைத்துக்கொண்டாலும் அந்த ஈரம் காயவில்லை. பிறகொரு நாள் க்ரிஸ்டின் காலேஜிலிருந்து தொப்பலாய் நனைந்தபடி மழை சுவடே இல்லாத வீட்டு வாசலில் வந்து நின்றபோது அதெப்படி அங்க பெய்யும் இங்க பெய்யலை என்ற கேள்விக்கு புன்னகைக்க மட்டும்தான் முடிந்தது.. தெருமுனை வரை வந்து பத்திரமாய் விட்டுச்சென்ற கல்லூரி காதலன் மழை.
இன்று அப்படி ஒரு நாள். தூறல் செல்லச் செல்ல வலுக்கத்துவங்கியது. வண்டியை ஓரம்கட்டுவது சராசரி மனிதன் செய்வது. ஆனால் எல்லா நேரமும் சராசரியாய் இருக்க முடிவதில்லை. சமயத்தில் பித்து பிடித்துக்கொள்கிறது. தலையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒடுபவன் முட்டாளாய் தெரிகிறான். கடைகளின் வாசல்களில் நிற்பவர்களெல்லாம் ப்ளாஸ்டிக் மனிதர்கள். நம்மை லூஸு போல பார்ப்பவர்களெல்லாம் வாழத்தெரியாதவர்கள். மழை மயக்கம். தூறலின்போதிருந்த பாடல்களும் உதட்டிலிருந்து வழிந்தோடிவிட மழை வலுக்க வலுக்க அங்கே பாடல் இல்லை, வண்டி இல்லை, நானுமே இல்லை. மழை முழுவதுமாய் ஆள்கிறது. ஒரு பெரிய வேகத்தடையை மிக அருகில் வந்ததுமே பார்த்து ப்ரேக் பிடிக்க பின்னாடி டயர் இங்குமங்குமாய் அல்லாடி நிலைக்கு வருகிறது. பிறகு மீண்டும் வேறு லோகம். வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு வருகிறவர்கள் அங்கெல்லாம் எப்படி இருக்கு இங்கெல்லாம் எப்படியிருக்கு என்று ஒப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள்
. மழை நகரத்தில் பெய்யவில்லை.மூளைக்குள். ராஜாங்கம் செய்கிறது. வெளியே இருப்பவனுக்கெல்லாம் என்ன தெரிகிறது.. அது வேறு மழை உலகம்.அந்த சிக்னலில் வந்து நின்ற நேரம் 40 செகண்ட் காட்டியது. மனம் பூமிக்கு வந்துவிட்டது. ஆடைகளை ஈரம் பிரித்து சரி செய்துக்கொண்டேன். அருகில் என்னை போலவே ஹெல்மெட் போட்ட பெண் ஸ்கூட்டியில் இருந்தாள். என் முன்னே பைக் ஆண்கள். பின்னால் அமர்ந்திருந்தவன் மழையில் நனைய தயங்கியவன்போல கர்சீப் எடுத்து தலையில் போட நினைத்தான். இந்த மழைய கர்சீப் தடுக்குமா.. அவன் நனைய விரும்பினான். விரும்புவதை மறைத்துக்கொள்ள பிரயத்தினப்பட்டான். சட்டென லேசாகி மீண்டும் பின் சீட்டில் அமர்ந்துக்கொண்டான். குதூகலித்தான். அந்த பெண் என்னை பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன். அங்கே நனைந்துக்கொண்டிருந்தவர்களெல்லோரும் சிரித்தோம். பிடித்தமானது பிடித்த மக்கள் எல்லோரும் நண்பர்கள். பித்துப்பிடித்தவர்கள். நாற்பது நொடிகளில் நினைவிலிருந்து மறையாத ஸ்நேகம்.
யுத்தக்களம் போல ஓவென்று இறைஞ்சியபடி சீறிக்கொண்டு பறந்த வாகனங்களில் எல்லாம் மழை. அந்த நீண்ட தார் ரோடு மீளவே முடியாத உணர்வுகளை தன் மேல் போர்த்திக்கொண்டே என்னோடு வந்தது. மழைக்காதலர்கள் பாக்கியவான்கள். இன்று பெங்களூருவில் மழை..Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29749747.post-18970385598039728102012-01-14T14:19:00.003+05:302012-01-14T14:26:24.668+05:30அவன் டைரியிலில்லாத குறிப்புகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf5jsQf00uvqrG5i0RLhThq9ASd8Yvk40dK6Z_ll4dp35FRxK3Fiz_Uz2IN7AtSHKnAssCQGnfkTYSCNOxJ09rnxOCPSPxuWf7CHyIiBIp8H6h5LaFUhH6AbcI82UvOyrDmhwHdg/s1600/man-shadow_pic.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf5jsQf00uvqrG5i0RLhThq9ASd8Yvk40dK6Z_ll4dp35FRxK3Fiz_Uz2IN7AtSHKnAssCQGnfkTYSCNOxJ09rnxOCPSPxuWf7CHyIiBIp8H6h5LaFUhH6AbcI82UvOyrDmhwHdg/s200/man-shadow_pic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697408208878391986" /></a><br /><br /><br />அவன் நடந்துக்கொண்டிருந்தான்<br />ஒருத்தி எதிர்ப்பட்டாள்<br />அழகியென நினைத்தபடியே<br />நடை தொடர்ந்தான்<br /><br />அவன் கூரை வெறித்தபடி அமர்ந்திருந்தான்<br />ஒருத்தி உறைமோர் கேட்க வந்தாள்<br />அழகியென நினைத்தான்<br />நினைத்துக்கொண்டே இருந்தான்<br /><br />அவன் வேலைக்குச் சென்றான்<br />ஒருத்தியும் வேலைக்கு வந்தாள்<br />அழகியென நினைத்தான்<br />நினைத்துக்கொண்டே இருந்தான்<br />அவளிடம் சொன்னான்<br /><br />அவன் கவிதை எழுதினான்<br />ஒருத்தியும் எழுதினாள்<br />அழகியென நினைத்தான்<br />நினைத்துக்கொண்டே இருந்தான்<br />அவளிடம் சொன்னான்<br />அவள் ம்ம் என்றாள்<br /><br />அவன் துக்கத்தின் பெருவெளியிலிருந்தான்<br />ஒருத்தி கைப்பற்றித் தேற்றினாள்<br />அழகியென நினைத்தான்<br />நினைத்துக்கொண்டே இருந்தான்<br />அவளிடம் சொன்னான்<br />அவள் ம்ம் என்றாள்<br />அவனும் ம்ம் என்றான்<br />போகிற போக்கில் பொழுது கழிந்தது<br /><br />ஒருத்தி வேறொருத்தி மற்றொருத்தி மற்றுமொருத்தி<br />உருவாகிக்கொண்டேயிருந்தார்கள்<br />வெளிச்சமும் இருளும் இடம் மாறிக்கொண்டேயிருந்தன<br /><br />ஒரு கோப்பை தேநீருக்குப்பின்னும்<br />மூளை தெளியாத மாலையொன்றில்<br />வழக்கம்போலவே ஒருத்தி எதிர்ப்பட்டாள்<br />அவன் சூழலின் கவனங்களேதுமற்று<br />நடந்துக்கொண்டேயிருந்தான்<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29749747.post-35917977798299891552012-01-11T14:43:00.003+05:302012-01-11T15:38:57.471+05:30என்றைக்குமில்லாமல்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw3jmxcwpIo_EQ7d1x8rAo8vQ20EvHF93JIGzSYuPQ-MCtsO6X18qO3b9VKyR4e5qwXuTZYcXyLZkSWJi7kFIRFLO3DAmpc9PkATrDltm5plp39F0VtwTPHDWWPkbg484M3b3itQ/s1600/Full_moon_tonight_by_The_Dark_Silhouette.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw3jmxcwpIo_EQ7d1x8rAo8vQ20EvHF93JIGzSYuPQ-MCtsO6X18qO3b9VKyR4e5qwXuTZYcXyLZkSWJi7kFIRFLO3DAmpc9PkATrDltm5plp39F0VtwTPHDWWPkbg484M3b3itQ/s200/Full_moon_tonight_by_The_Dark_Silhouette.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5696300943977299682" /></a><br /><br />இன்று இந்த நிலவு<br />இத்தனை பெரியதாக இருக்கிறது<br /><br />வேறெங்கும் திரும்பிவிட முடியாதபடி<br />தரையெங்கும் வெளிச்சம் பரவ<br />என்னை நெருங்கிக்கொண்டேயிருக்கிறது.<br /><br />உன் அன்பை போலவே<br />இன்று இந்த நிலவு<br />இத்தனை குளிர்ச்சியாயிருக்கிறது<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-29749747.post-21841581374970280722012-01-09T10:27:00.004+05:302012-01-09T10:38:59.348+05:30வேறாயினும்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqHp-SPL2GzAKR45gfTWBudy-o5rhAjxUZZagnNWmBYBxqgi5uWNIFzCA1Ibb6E6PJqr95LkoxSRtmdxRP1K93u8FFiuPwpulqRdOrmYgugCPq2AP4tezJd1XFzOJatvJ5YLHkoQ/s1600/can-stock-photo_csp1931026.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqHp-SPL2GzAKR45gfTWBudy-o5rhAjxUZZagnNWmBYBxqgi5uWNIFzCA1Ibb6E6PJqr95LkoxSRtmdxRP1K93u8FFiuPwpulqRdOrmYgugCPq2AP4tezJd1XFzOJatvJ5YLHkoQ/s200/can-stock-photo_csp1931026.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695494703744130978" /></a><br /><br /><br />ஆகாத வேளை தான் இது<br /><br />நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென<br />நம்பிக்கொள்கிறோம்.<br /><br />நாம் மனிதர்கள் கூட இல்லை.<br />கேரட் தோட்டத்தில் விளையாடும் முயல்கள்<br />அல்லது பெருங்கடலோரத்து சிறு ஆமைகள்<br /><br />நீந்தி ஊர்ந்து மணல் தின்று<br />மரணித்துவிடுவதன் பயங்களற்று<br />இலக்குகளின்றி அலைகிறோம்<br />தெளிந்த நீரில் விரல் அமிழ்த்தி <br />சுருங்கும்வரை காத்திருக்கிறோம்<br />கால் இடறும் எல்லைகளை<br />வசதிக்கேற்றபடி தள்ளிவைக்கிறோம்<br /><br />எல்லா நேரங்களிலும்<br />நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென<br />நம்பிக்கொள்கிறோம்.<br /><br />இருந்தும் நிகழ்பொழுதில் <br />சொல்லிவைத்தாற்போல அப்பிக்கொள்கிறது<br />கண்கள் பழகிக்கொள்ளவே முடியாத பேரிருட்டு.<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-29749747.post-22721405260158984772012-01-03T15:48:00.001+05:302012-01-03T15:48:54.630+05:30பெயர்அனன்யா அம்மா<br />என்றழைத்த பெண்ணிடம் திரும்பி<br />ஏதோ சொல்ல வாயெடுத்து<br />நிறுத்திக்கொண்டேன்.<br />இதைவிட அழகாய் வேறெப்படி<br />அழைத்துவிட முடியும்.Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29749747.post-65895446619641879432011-12-28T21:04:00.001+05:302011-12-28T21:13:04.358+05:30ஒரே கவலை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia11zNf9CBCrn4E31Fv8HeonfofTGfU_HAiEFZTPoQiy9Ut0tdSwgrRj1C2z094SQlEaugglTy4Or8DH_JkZ9pPhgRCvPI6YJgzbbtRhPI9iZmvZmHWec0C5wXKLW8CA7ytdwvdA/s1600/birdonawire500.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia11zNf9CBCrn4E31Fv8HeonfofTGfU_HAiEFZTPoQiy9Ut0tdSwgrRj1C2z094SQlEaugglTy4Or8DH_JkZ9pPhgRCvPI6YJgzbbtRhPI9iZmvZmHWec0C5wXKLW8CA7ytdwvdA/s200/birdonawire500.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691205216608213746" /></a><br /><br /><br />மர்மமாய் இறந்துவிட்ட<br />பெண்ணின் உடலையும்<br />உயிரோடிருந்த<br />பாஸ்போர்ட் புகைபடத்தையும்<br />காட்டினார்கள்.<br />மாரிலடித்துக்கொண்டு அழும்<br />பெண்ணை காட்டாமலே<br />வேறு செய்தி மாறியது<br />குறையாயிருக்கிறது.<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29749747.post-37740381199506121452011-12-26T11:37:00.002+05:302011-12-26T12:41:29.446+05:30வெந்நீர் ஊற்றுகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLU4QYR2OeEmW9mjc7ukjTlbapiTgonWtSgSpTeuWTUIUzxekBYc2nrVfXCPTtQM9szF8mgzwqa88aijQd6izK5fra19RHaETt7ca4PgtVeU7suk0aAcUXiDrnpylijtxd79GhaA/s1600/woodenbridge-L.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLU4QYR2OeEmW9mjc7ukjTlbapiTgonWtSgSpTeuWTUIUzxekBYc2nrVfXCPTtQM9szF8mgzwqa88aijQd6izK5fra19RHaETt7ca4PgtVeU7suk0aAcUXiDrnpylijtxd79GhaA/s200/woodenbridge-L.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690330864119688114" /></a><br /><br />சந்திக்க விருப்பமற்ற ஒருவர்<br />தான் சந்திக்க தேவையற்ற ஒருவரை<br />பழைய மரப்பாலமொன்றின் நடுவே<br />தவிர்க்கவியலாமல் பார்க்கும்படியாயிற்று<br /><br />நலமா நலம்<br />நலமா நலம்<br />தேவையற்ற விசாரிப்புகள்<br />தெரிந்த பதில்கள்<br /><br />தத்தம் <br />புகழை<br />வெற்றிகளை<br />கம்பீரத்தை<br />காதல்களை<br />அவசரமாய் பிரஸ்தாபிக்கிறார்கள்<br /><br />வார்த்தைகள் ஒன்றோடொன்று மோதி<br />யாருக்கும் எட்டும்முன்னே <br />பாலத்தின்மேல் தெறித்து உடைகின்றன<br /><br />வெந்நீர் ஊற்றொன்று<br />தடையமற்றுத் தூர்ந்ததுபோன்ற வெறுமை சூழ<br />வந்த வழியே சோர்ந்துத் திரும்பிச்செல்கிறார்கள்<br /><br />வீட்டின் சுவர்களுக்குள்ளும்<br />தடித்த போர்வைக்குள்ளும் <br />வியர்த்தபடி கழிகிறது நீண்ட இரவு<br /><br />அருவருப்பு தாங்காத மரப்பாலம்<br />உடைந்து <br />தண்ணீரில் உருண்டோடுகிறது.<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-29749747.post-9939327268736786302011-12-22T10:56:00.002+05:302011-12-22T11:09:24.113+05:30சொல்லப்படாத பெயர்பார்த்ததுமே பெயர் என்ன<br />என்கிறார்கள் குழந்தையிடம்<br />சொல்லிச் சொல்லி சலித்துவிட்ட குழந்தை<br />பெயர் சொல்வதை நிறுத்திக்கொண்டது<br />கேட்கும்போதெல்லாம் சொல்லப்படாத பெயர்<br />அறையெங்கும் பட்டு தெறித்துக்கொண்டேயிருக்கிறதுUnknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29749747.post-13974593315905625662011-12-22T10:47:00.000+05:302011-12-22T10:54:52.695+05:30கற்கள்ஒவ்வொன்றாய் விழ விழ<br />கலங்குகிறது<br />வண்டலும் பாசையும்<br />கிளர்ந்தெழுகிறது<br />காலம் நகர<br />ஓரிடத்து வண்டல்<br />வேரிடத்தில் படிகிறது<br /><br />கற்கள் விழ கலங்கும்<br />கலங்கி பின் தெளியும்<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29749747.post-70768905097356327752011-12-22T10:45:00.001+05:302011-12-22T10:56:44.816+05:30விடிவுரத்தம் கசிந்து கசிந்து<br />வடிந்துவிட்ட சாயும்காலத்தில்<br />உள்ளாடைகள் களைந்து<br />படுத்திருப்பவள்போல<br />மல்லாக்க கிடக்கின்றன பெரும்மலைகள்Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29749747.post-47720446305756830742011-01-24T15:08:00.001+05:302011-01-24T15:10:27.425+05:30சுடச் சுட மழைவெப்பம் தாளாமல்<br />பிரிந்து நடக்கையில் தான்<br />பொழியத்துவங்குகிறது பெருமழை<br /><br />அருகிலிருக்கும் கூரை தேடி ஓடி<br />ஈரமாகாததாய் நம்பிக்கொள்வது<br />ஆசுவாசமாயிருக்கிறது<br />ஏனெனில்<br />நீர் சொக்கும் ஆடைகளில்<br />இருக்கவே செய்கின்றன<br />அழுக்குப்படிந்த கற்பனைகளுக்கான<br />சாத்தியகூறுகள்<br /><br />இன்னும் முடிவடையாத நாளின் ஓரத்தில்<br />இறுகிக்கிடக்கும் மண் முடிச்சுக்கள்<br />எதிர்பாராமல் இளகுகின்றன<br /><br />கலங்கி இருப்பினும்<br />குளிர்ந்து வழிந்தோடுகிறது<br />ரோட்டோரத்து செம்மண் நீர்<br /><br />போதிலும்<br />நகரமெங்கும் பரவி பெய்யும் மழையில்<br />நனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான<br />அலைகழிதலில்<br />ஒவ்வொருமுறையும் கழிந்துவிடுகிறது<br />நிகழ்<br /><br />- அனிதாUnknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-29749747.post-38070143181413470452011-01-24T15:05:00.002+05:302011-01-24T15:10:54.202+05:30கப்பற் தொழிற்சாலைகப்பல் செய்து தரச் சொல்லி<br />காகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை<br /><br />முக்கோணமாய் மடித்து<br />நீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு<br />கப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது<br /><br />எல்லா கோணங்களிலும்<br />மூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்<br />காத்திருந்தால் தானாய் வெளிப்பட<br />கவிதை போலல்ல<br />கப்பல் செய்வது<br /><br />வெகுநேரமாய்<br />கசங்கிய காகிதத்தை பார்த்தபடியே<br />கப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு<br />நான் படித்த கப்பல் கதைகளெல்லாம்<br />ஒவ்வொன்றாய் சொல்லத்துவங்கினேன்<br /><br />காகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-29749747.post-30308810481971701472011-01-24T14:45:00.003+05:302011-01-24T14:49:41.663+05:30<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwWTMPWYkqF1LoKQzf5CsrIoDXlzpk1RzAVLc9aziJCFRcT6ok6_BqhKL9pBM8hZhtBBYsAa803f6oNCoHM9ER4QDd1Wws0A8ZfkrVpKufZ-JcwsbU4caX0iGfAQ6U5_oldDxHFA/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwWTMPWYkqF1LoKQzf5CsrIoDXlzpk1RzAVLc9aziJCFRcT6ok6_BqhKL9pBM8hZhtBBYsAa803f6oNCoHM9ER4QDd1Wws0A8ZfkrVpKufZ-JcwsbU4caX0iGfAQ6U5_oldDxHFA/s200/%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565678845659417346" /></a><br /><br /><br />இந்த வலைப்பூவை துவங்கையில் இத்தனை நீண்ட இடைவேளை விழும் என நினைக்கவில்லை.<br />படித்துக்கொண்டிருப்பது மட்டுமே பிரதானமாய் இருந்தது அப்போது.<br />அலுவலகம் செல்கையில், தேநீர் பருகுகையில், விடுதியின் தனிமையில், பேருந்து பயணங்களில் என எப்பொழுதும் இடத்திற்கேற்றவாறு புத்தகங்கள் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.<br />தினம் தினம் கவிதை எழுதுவதெல்லாம் எனக்கு என்றுமே கைவந்ததில்லை. மெல்ல உணர்வாய் உருவாகி வார்த்தைகள் சேர்ந்து மனதை அழுத்திக்கொண்டிருந்து பின் தானாய் வெளிப்படும் வரை காத்திருப்பேன்.<br />அந்த நிலை உலகளாவிய செய்கைகளிலிருந்து அப்பார்பட்டதாகவே இருந்திருக்கிறது.<br />கவிதை தோன்றி எழுதும் வரை வேறு பிரதேசத்தில் உலவிவிட்டு, கவிதை முடிந்ததும் தரையிறங்குவது போன்ற மனநிலை. எதிர்பார்ப்புகளற்றுக் கழிந்துக்கொண்டிருந்த காலம் திருமணமானதும் மாறத்துவங்கியது. பிடித்தது பிடிக்காதது, எதை ஒப்புக்கொள்வது எதில் நிலைபாடுகள் மாறாமல் நிற்பதென தினம் புதிய கோணமாய் யோசனைகள் இத்தனை காலமாய் என்னை பற்றிய என்னுடைய புரிதல்களை கேள்வியெழுப்பத்துவங்கின..<br /><br />விளிம்பிலிருந்து சற்று உள்ளே வந்து இருவர் இருக்கும் உலகிற்குள் இழைந்துக்கொள்வது எப்படியென புரிந்தபிறகு இருத்தல் அழகாகத்துவங்கியது. பிறகு அனன்யா பிறந்தாள். அதுவரை கூட என் கவிதைகள் என் இருத்தலை நோக்கித் திரும்பவில்லை. குழந்தை வந்த பிறகு அவளின் உலகம் புதியதாய் இருந்தது. அதனை அருகிருந்து பார்ப்பது இந்நிமிடம் வரை மாறாத ஆச்சர்யங்களை தந்துக்கொண்டு தான் இருக்கிறது. அது கவிதைக்குள்ளும் புகுந்துக்கொண்டது.<br /><br />இப்பொழுது மீண்டும் ஒரு குழந்தை. இம்முறை அழகான ஆண் குழந்தை. இந்த பத்து மாதங்களும் நான் வலைப்பூ பக்கம் வரவில்லை.. ஏனெனில் இந்த குழந்தையும் அவளைப்போலவே எந்த சங்கடங்களும் இன்றி ஆரோக்கியமாய் இருக்கவும், குழந்தையுடன் முழு பொழுதையும் கழித்து நினைவுகள் சேகரிப்பதிலும் உறுதியாயிருந்தேன்.<br /><br />இன்று கணவர், ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என வாழ்க்கை முழுமைபெற்றிருக்கிறது.<br />என்னுடன் என் வலைப்பூவும் நல்ல நண்பர்களும் பயணித்துக்கொண்டிருப்பது பெரும் பலமாயிருக்கிறது.<br />நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.<br /><br />- அனிதாUnknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-29749747.post-840570078968916112010-05-05T15:27:00.002+05:302010-05-05T15:33:03.406+05:30பெண்களும் பூக்களும்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY2rr-d0MKLkQf-hd28SuDifZhFyhBvNcl2tIjrpFvqmlm7NfuNgHdpzHmgijLFgUyQIyFy1SQxCx7RdSOA2-OOANpGzzljJZz3e6ys-zMQjavwNoo8X7mXxLPeaF7sPmeE1aReA/s1600/zen_squares_rim_single_flower_LRG.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 177px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY2rr-d0MKLkQf-hd28SuDifZhFyhBvNcl2tIjrpFvqmlm7NfuNgHdpzHmgijLFgUyQIyFy1SQxCx7RdSOA2-OOANpGzzljJZz3e6ys-zMQjavwNoo8X7mXxLPeaF7sPmeE1aReA/s200/zen_squares_rim_single_flower_LRG.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467723540320827538" /></a><br /><br /><br />ஒரு வலைப்பூவை துவங்குவதென்பது ஒரு குழந்தை பிறப்பதை ஒத்ததாக எண்ணத்தோன்றுகிறது. வலைப்பூவுக்கு பெயரிடுகையில் எழுதப்போகிறவர் மனநிலை சார்ந்தே பெயர்கள் யோசிக்கிறார்கள். எழுதப்படும் கருத்துக்களும் ஆரம்பத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத என் எண்ணம் இது என்பதாய் இருக்கிறது. இந்த வலைப்பூவை துவங்கினால் நாளை நான் பரவலாக அறியப்படுவேன் என்கிற எண்ணம் எதுவும் ஆரம்பத்தில் இருப்பதில்லை. பிறகு எழுதுவது பிடித்து போக சிலர் பாராட்டத்துவங்கிய பிறகு, மெல்ல தனக்கே உண்டான எழுத்து பிறர் பார்வைக்கு மாறத்துவங்குகிறது. மாற்றங்கள் நிறத்திலும், லேஅவுட்டிலும் இருப்பதை தாண்டி புத்திக்குள்ளும் புகுந்துக்கொள்கிறது. நானும் ரவுடி தான் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தெரியுமோ தெரியாதோ யார் வேண்டுமானாலும் பதிக்க முடிகிறது. முக்கியமாக, எல்லாம் தெரியும் என்கிற தொனி சற்று மிரளவே செய்கிறது. அங்கீகாரத்திற்காய் சதா சர்வமும் அலையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது, பிறர் வலைப்பூவில் பின்னூட்டமிட்டால் அவர் நமக்கு பின்னூட்டமிடுவார் என்று கணக்கு போடுதுவதெல்லாம் அங்கீகாரத்தின் நீட்சிகளே..<br /> <br />இப்படியிருக்க, எந்த குழப்பங்களும் யோசனைகளும் இல்லாத அந்த வலைப்பூ துவங்கிய நாளும் ஆரம்பத்து எழுத்துக்களும் எவ்வளவு நேரடியானவை.. மனதுக்கு இதமானவை.. எனக்கு ஏதாவது ஒரு வலைப்பூ வாசிக்க கிடைக்கையில் பழைய எழுத்துக்களையே முதலில் வாசிக்கிறேன். எழுத்தில் தேர்ச்சி வருவதற்கும் எழுத்தின் நோக்கம் மாறிப்போவதற்குமான வித்தியாசத்தை கண்கூடாக உணர முடிகிறது.<br /> <br />இப்படி யோசித்ததின் அடிப்படையில் நான் வெகு நாட்களாய் படிக்கும் சில வலைப்பூக்கள் சட்டென்று நினைவுக்கு வந்தன.<br /> <br />cakerwakers.blogspot.com எழுதும் கிரிஸ்டி யை நான் தனிபட்ட முறையில் அறிந்ததில்லை. Serendipity யாக தான் இந்த வலைப்பூ கண்ணில் பட்டது. இலக்கியம் இல்லை. எதை பற்றியும் பெரிய கருத்துக்கள் இல்லை. ஆங்கில புலமையின் வெளிபாடு இல்லை. பின்னூட்ட கவலைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் இதை நான் எழுதுவதால் எனக்கு அவமானமோ பாராட்டோ வந்துவிடுமோ என்ற குழப்பம் இல்லை. எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். அவ்வளவே இந்த வலைப்பூ. ஏதோ ஒரு நெருக்கத்தை இந்த வலைப்பூ தருகிறது. கஷ்டங்களை எழுதும்போதும் ரௌத்திரம் வெளிப்படுத்தும்போதும்கூட மெல்லிய நகைச்சுவையுடனே எழுதுகிறாள். (உ.ம் - I Childproofed the house but they still got in!!) அலுவலகம், இலக்கியம், ஆளுமைகள், நிழல்வெளி நீர்வெளி எல்லாவற்றையும் இளக்கிவிட்டு படித்தால் பிடிக்கலாம்.<br /> <br />tinklingsmiles.blogspot.com வலைப்பூவை படிக்கும்போதெல்லாம் ஒரு மென்மையை உணர்கிறேன். தான் மனதில் நினைத்ததை தெளிவாக கம்பீரமாக கோர்வையாக ஸ்மைலியால் சொல்ல முடிகிறது. சமூகத்தை பற்றிய தன் பார்வையை முன்வைப்பதிலும் தயக்கங்கள் இல்லை. இவள் தான் பெண் என்பதில் பெருமைக் கொள்ளும் அதே வேளையில் வலைப்பூவின் எந்த இதழும் பெண்ணியம் பேசவில்லை. சில வேளைகளில் வேதாந்தி போலவும் சில நேரம் வம்பளக்கும் எதிர் வீட்டு பெண் போலவுமான எழுத்து ஆர்வமேற்படுத்துகிறது. என் நீண்ட நாள் தோழி என்பதாலும் எத்தனையோ விஷயங்களை பேசி விவாதித்து பரிமாறிக்கொண்டதாலும் என்னால் இவளின் வலைப்பூவில் இருக்கும் மனம் திறந்த பாசாங்கற்ற எழுத்தை உணரவும் ரசிக்கவும் முடிகிறது.<br /> <br />yalisai.blogspot.com சமீபத்தில் லேகாவின் வலைப்பூவை காண நேர்ந்தது. முதலில் என்னை ஈர்த்தது அந்த வலைப்பூவின் ஒழுக்கம். மிக நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டு தெளிவான வெளிபாடு. எழுத்துக்களில் எங்கும் அலட்டல் இல்லை. பதட்டம் இல்லை. நான் படித்தேன், நான் பார்த்தேன் என் கருத்து இது என்பதான பகிர்தல் மட்டுமே இருந்தது. முழுதாய் ஆற அமர படிக்க இலக்கியமாய் ஒரு வலைப்பூ.. லேகாவிற்கு இந்த முதல் விருது கிடைத்திருப்பதில் மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள் லேகா!<br /> <br />எந்த தேடல்களும் இன்றி எழுதியிருப்பதை அப்படியே உள்வாங்கி ரசிக்கவும் ஒரு மனநிலைத்தேவைப்படுகிறது. இந்த வலைப்பூக்களை படிக்கையில் lightness வந்துவிடுகிறது. மனம் திறந்து கர்வங்கள் களைந்து ரசிக்கலாம்.<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-29749747.post-14846119762727563502010-04-12T12:15:00.004+05:302010-04-12T12:26:37.971+05:30நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwHZlBeBkKQVev0X70xyDcwIusoJvuDQ0nvkPMurnkLhWhtW3j85UfSHubHJ5JACWhAsjbqcPXgMnKF77BK_-sTXLwafIMpZOAIHkr5Bg1DjHE-picEb779DgqXO6heggOcjmaDQ/s1600/love-cartoons-8.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwHZlBeBkKQVev0X70xyDcwIusoJvuDQ0nvkPMurnkLhWhtW3j85UfSHubHJ5JACWhAsjbqcPXgMnKF77BK_-sTXLwafIMpZOAIHkr5Bg1DjHE-picEb779DgqXO6heggOcjmaDQ/s200/love-cartoons-8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459141227152121922" /></a><br /><br /><br /><br />போன வருடம் நண்பன் ஒருவன் தொலைபேசினான்.<br /><br />அனிதா நான் விமல் பேசறேன்..<br />யேய் என்னடா சென்னை வந்திருக்கியா..<br />ஆமாம் போன வாரம்..<br />இப்போ தானே போனே ஆறு மாசம் கூட ஆகலையே என்ன ஆச்சு?<br />ப்ரியாவுக்கு கல்யாணமாம்..<br /><br />ஓ ப்ரியா.. காதல். நான்கு வருடங்கள் இருக்கலாம் இருவரும் காதலிக்கத்துவங்கி. <br />இவன் எனக்கும் என் கணவருக்கும் பொதுவான நண்பனாதலால் எங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்றபோது, ப்ரியாவுக்கும் நேரா வந்து குடுங்களேன், சந்தோஷப்படுவா என்றான்.<br />அது தான் அவளை நான் பார்த்த ஒரே தடவை. அழகு தான். கண்கள் பெரியதாய் இருந்தன. கொஞ்சம் முறைப்பது போல் கூட நினைத்தேன். மலர்ந்து பேசினாள். அவன் அருகாமையை விரும்புகிறவளாயிருந்தாள். ஏதாவது சொல்லிவிட்டு என்ன சொல்றே விமல்.. என்று அடிக்கடி கேட்டாள்.. <br /><br />அவள் ஒரு ஆல்பம் வைத்திருந்தாள். அவளுடைய நண்பர்களின் புகைப்படங்களெல்லாம் சேகரிக்கும் பொழுதுப்போக்கு இருந்தது அவளுக்கு. நிறைய முகங்கள். பாஸ்போர்ட் போட்டோக்கள் நிறைய இருந்தன. எனக்கு பரிச்சயமான முகம் ஏதாவது தெரிகிறதா என்று புரட்டினேன்.. எதுவுமில்லை. உங்க கல்யாணமானதும் உங்க ரெண்டு பேரு போட்டோவும் தாங்க என்றாள். கண்டிப்பா என்றுவிட்டு கிளம்பினோம்.<br /><br />அவளுக்கு தான் திருமணம். இனி சரிவராது என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினாளாம். இவன் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் தொலைபேசிகளுக்கும் பதில் இல்லையாம். ஒரு வாரம் முன்பு தான் நண்பன் ஒருவன் சொன்னானாம்.. அவளுக்குத் திருமணம் என்று. அடித்துப் பிடித்து அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்.<br /><br />என்னவாம் அவளுக்கு என்றேன் அசுவாரஸ்யமாய்.. திருமணம் வரை வந்துவிட்டப் பிறகு நண்பனின் காதலி என்ற பிடிப்பெல்லாம் போய்விட்டது போலிருந்தது.தெரியலை.. மண்டையே வெடிக்குது. அவளை பார்க்க முடியலை.. அம்மா நான் போய்ட்டு பேசறேண்டா ன்னு சொல்றாங்க.. அவளுக்கு என்னை உண்மையா பிடிச்சிருந்தா இந்த கல்யாணம் பண்ணிக்க மாட்டால்ல என்றான்.<br /><br />மிக சரி. முப்பத்தைந்து வயது வரை காதலனுக்காக காத்திருந்து எதிர்ப்புகளெல்லாம் சமாளித்து வேறு வழி இல்லாமல் பெற்றோர் சம்மதித்து திருமணம் நடத்திவைத்த பெண்ணை எனக்குத்தெரியும். தாலி கட்டிக்கப்போறது நான் தானே.. என்று அவள் மெல்லிசாய் சொன்னது பெரிய அதிர்வாய் எனக்குள் இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. <br /><br />மிக கடினமான கட்டம் இது. ஒரு ஆணுக்கு, இனி எல்லாம் இவள் என்று ஒருத்தியை உருவகப்படுத்தி, கனவு கண்டு, ஊருக்கெல்லாம் சொல்லி, அவளுக்காய் பணம் ஈட்ட ஓடுகிறபோது,இதெல்லாம் இல்லை சும்மா என்பது எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத குழப்பத்திற்கு தள்ளிவிடுகிறது. <br /><br />அவ போனா போறா விடுடா. நீ இப்போ அமெரிக்கால வேலை பாக்கறே.. கொஞ்சம் வெளியே போ, வேலைல கவனம் வை. கொஞ்ச நாள்ல சரி ஆகிடும். வேற சூழல், மனிதர்கள்.. எல்லாம் சரி ஆகிடும் என்றேன்.<br /><br />என் கணவர் வந்ததும் அவர் பங்கிற்கு காதல் தோல்வி கதைகளெல்லாம் சொல்லி அவனை திசைத்திருப்பிக்கொண்டிருந்தார். இதெல்லாம் வாழ்க்கையில் கட்டங்கள், அனுபவங்கள் என்று ஏதேதோ சொன்னார்.நீ சென்னை ல உக்காந்துகிட்டு என்ன பண்ண போறே? கிளம்பி யூ. எஸ் போ. இல்லேன்னா பெங்களூரு வந்து எங்களோட ரெண்டு நாள் இரு. தனியா உக்காந்துகிட்டு குழம்பாதே என்றார்.<br /><br />அவள் திருமணத்தை பார்த்துவிட்டு பெங்களூரு வருவதாக சொன்னான்.<br /><br />இரண்டு நாட்கள் கழித்து இரவு பதினோரு மணிக்கு என் கணவர் எழுந்து நாஸ்ட்ராடமஸ் போல, விமலுக்கு போன் பண்ணுடி என்றார். இந்த ராவேளைக்கு ஏங்க நீங்க வேற என்று திரும்பி படுத்துக்கொண்டேன்.<br /><br />அடுத்த நாள் மதியம் தொலைபேசி வந்தது நீங்க விமலோட தோழியா? விமல் இறந்துட்டாரு என்றார்கள். ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று அலறினேன். நான் அப்போவே நினைச்சேனே என்று அரற்றினார் என் கணவர்.. எத்தனை அழைத்தும் நான் வரமாட்டேன் அவனை பார்க்க என்று சொல்லிவிட்டேன். அவர் மட்டும் சென்றார். நீ வராததே நல்லது, காண சகிக்கலை என்றார். அதற்கு மேல் கேட்டுக்கொள்ளவில்லை. <br /> <br />இரவுகளெல்லாம் கண்ணாடி அருகே சென்றால் அவன் விஷ பாட்டிலுடன் என் பின்னே நிற்பது போலவும், ஜன்னல் கம்பிகளின் வெளியிருந்து விஷ பாட்டிலை தூக்கி பிடித்தபடி என்னை எட்டி பார்ப்பது போலவும் தோன்றிக்கொண்டேயிருந்தது. <br /> <br />பிறகு பதற்றம் குறைந்து, பயம் குறைந்து, பரிதாபம் குறைந்து, பெரும் கோபமாய் உருவெடுத்தது. அவள் திருமணம் முடியும் வரை காத்திருந்து இனி அவள் தனக்கு இல்லை என்று தெளிவாய் புரிந்தபின் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் தனக்கான முடிவை தேடிக்கொண்டவனை நினைத்து வெறுப்பாய் இருந்தது. <br /> <br />நான் இப்படியான அதீத காதலெல்லாம் பார்த்ததே இல்லை. காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஓர்க்குட்டில் புகைப்படங்கள் வெளியிடுபவர்களைத்தான் எனக்கு தெரியும். இன்னும் சற்றே அதிகப்படியாய் நான்கைந்து பெண்களுடனோ ஆண்களுடனோ ஒரே நேரத்தில் காதல் பேசுபவர்களை கூட ஏதோ சில ரசாயன காரணங்கள் என அப்படியா என எடுத்துக்கொள்ள முடிகிறது. யாரோ சொல்ல கேட்டேன் சராசரி மனிதனின் வாழ்வில் குறைந்தது பதிமூன்று காதல்கள் வெவ்வேறு வடிவங்களில் வந்துபோகுமென..<br /> <br />போன வாரம் அவளுக்கு குழந்தை பிறந்திருப்பதாய் சேதி கிடைத்தது. மரணங்களும் தோல்விகளும் நிகழ நிகழ காதல் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. <br /> <br />சென்ற வாரம் விண்ணை தாண்டி வருவாயா பார்த்துவிட்டு காதல் சொட்ட சொட்ட வெளியே வந்தேன். பின்னாலேயே வந்த என் கணவர் பார்க்கிங் லாட் டோக்கன் உங்கிட்டயா இருக்கு என்றார்.. ஐயோ இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படலையா நீங்க என்றேன்..<br /> <br />படம் நல்லாதான் இருந்துது ஆனா ஆட்டோகிராப் மாதிரி இல்லை.. அதுதான் என் டைப். அதுலயும் தானே காதல் இருக்கு என்றார் அப்பாவியாக.. <br /> <br />ஏஸி வேண்டாம் என்றுவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டேன். காற்றில் குளுமை ஏறியிருந்தது.<br /><br />- அனிதாUnknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-29749747.post-63436579137796749152010-03-19T13:49:00.005+05:302010-03-19T14:08:44.780+05:30பயணிக்க மறந்த சாலைகள்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUcZ3N97zBoKz6htFUKogr5T8nw_Cz7HdSPFM8UbYb8dUZ47-0lF9BzfWxg7T8Nt6ssOIooXhVnfyl2JFh6hPADwislhUeyTx9vn9QKIxYfiZiPsLpX8-BwCxLF99V_lPTnkfw9g/s1600-h/birthday+cake"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUcZ3N97zBoKz6htFUKogr5T8nw_Cz7HdSPFM8UbYb8dUZ47-0lF9BzfWxg7T8Nt6ssOIooXhVnfyl2JFh6hPADwislhUeyTx9vn9QKIxYfiZiPsLpX8-BwCxLF99V_lPTnkfw9g/s200/birthday+cake" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450257093430325138" /></a><br /><br />அனன்யாவின் முதல் பிறந்தநாளை எங்கே எப்படி கொண்டாடுவது என்று நீண்ட நாட்களாய் யோசித்துக்கொண்டிருந்தோம்.. எல்லோரும் பொதுவாக செய்வதுபோல் நண்பர்கள் ,சொந்தங்கள் எல்லோரையும் அழைத்து கேக் வெட்டி பிறகு நார்த் இண்டியன் உணவு வகையோ ,நம்ம ஊர் வாழை இலை பரிமாறலோ வைத்து முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தோம்.. கிட்டதட்ட ஒரு வருடமாக எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் மாறி மாறி வந்துக்கொண்டிருந்ததால், முதல் பிறந்தநாளுக்கென்று எதுவும் வித்தியாசமாகவே இல்லாதது போல் தோன்றியது. அதுவுமில்லாமல் தம்பி திருமணத்திற்கு வந்த என்னை தூக்கி வளர்த்த எதிர் வீட்டு அக்காக்கள் நீயெல்லாம் குழந்தைல எவ்ளோ குண்டா இருப்பே.. உன் பொண்ணு என்ன ஒல்லியா இருக்கா என்று நான் என் பிள்ளைக்கு சாப்பாடே போடுவதில்லை என்ற ரேஞ்சுக்கு கேட்டுவிட்டு போக, வேறு சிலரோ கருப்பு பொட்டு வெக்கலியா கருப்பு வளையல் போடலியா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்..<br /> <br />எனக்கு கண், திருஷ்டி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் (God is watching, Good fetches Good, Bad fetches Bad) என்று மட்டும் எதனாலோ அழுத்தமாக மனதில் பதிந்துவிட்டதால் கடவுள் என்ற நம்பிக்கையை தவிர வேறு எந்த உலகளாவிய மாயைகளையும் ஆதாரமில்லாமல் பின்பற்ற முனையவில்லை. இப்படியிருக்க, குழந்தைக்கு இதை செஞ்சியா, அதை செஞ்சியா என்ற கேள்விகளுக்கு கேட்பவர் மனம் நோகாமல் பதிலளிப்பதே எனக்கு பெரும் சவாலாக இருந்தது..<br /> <br />இதுவாவது பரவாயில்லை.. என் தம்பி திருமணத்தில் மிக அழகான பரிசு வந்திருந்தது.. கண்ணாடி பழக்கூடை.. மிக அழகான வேலைபாடுகளோடு தனித்தன்மையான பரிசு.. பார்த்தவுடன் அப்பா சொன்னார்.. சூப்பரா இருக்கு!! இதே மாதிரி ஒண்ணு நான் ஒருதங்க கிரஹ பிரவேசத்துக்கு போன வருஷம் வாங்கி தந்தேன்!! அந்த ஒருதங்க தான் அந்த பரிசை தந்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.. அடப்பாவிகளா.. அட்டைய கூட மாத்தலையே.. என்று அப்பா நொந்துக்கொண்டிருந்தார்.. ஒரு வருடம் பத்திரபடுத்தி கொண்டுவரவும் ஒரு திறமை வேண்டும் என்றேன் நான்.. பொதுவாகவே இம்மாதிரி அழகான பரிசுபொருட்கள் உபயோகிக்க மனது வருவதில்லையாதலால் ஒரு லிஸ்ட் போட்டு யாரார் எது எது கொடுத்தார்கள் என்று குறித்துவைத்தால் பின்னாளில் அவர்கள் விசெஷத்திற்கு வந்த பரிசிலேயே ஏதாவதொன்றை கொடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.. ஆனால் அதையே கொடுத்தது கொஞ்சம் ஓவர் தான். அந்த பழக்கூடையை எங்கள் வீட்டில் பார்க்கும்போதெல்லாம் ஒரு புன்னகை தவிர்க்கமுடியாததாகிறது..<br /> <br />இதையெல்லாம் யோசித்துவிட்டுதான் எங்காவது வெளியூர் போகலாமே என்று தோன்றியது. நான்கைந்து இடங்கள் யோசித்ததில் குழந்தை நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிராத, வெயில் அதிகமில்லாத நமக்கும் சற்றே பழகிய இடமாக ஓகே ஆனது கொடைக்கானல். என்னுடைய கல்லூரிகள் மற்றும் குடும்ப சுற்றுலாக்கள் என ஐந்து முறை அங்கே சென்றிருந்தபடியால் நம்ம ஊரு என்ற உணர்வு வந்துவிட்டிருந்தது. மிதமான குளிரில் அழகாய் இருந்தது ஊர். சுற்றிப்பார்க்க வேண்டும் என்றதுமே பெரிய அட்டவணை ஒன்றை கையில் கொடுத்தார்கள்.. நாலு பேரு, காலையில ஒன்பது மணிக்கு கிளம்பி பில்லர் ராக்ல ஆரம்பிச்சு சாயங்காலம் அஞ்சு மணிக்கு லேக்ல போட்டிங் ல முடிப்போம். இன்னோவா வரும். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்கள்..<br /><br />சமீபத்தில் ஒரு நண்பருடன் பயணத்திற்கும் சுற்றுலாவிற்குமான (travel vs tour) வித்தியாசம் பற்றி பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..சரி குழந்தை ஒன்று இருக்கையில் ட்ரெக்கிங் போன்ற சாகச வேலைகளெல்லாம் சரிவராது என்று தெரியும். கோக்கர்ஸ் வாக்கில் கேரட் தின்றபடியே நடந்துவிட்டு அடுத்து சென்றது லேக் வியூ பாயின்ட். அங்கே நின்று பார்த்தால் கோடை ஏறி தெரிகிறது.. நான் சலித்துக்கொள்வதை பார்த்த பைனாகுலர் இயக்குபவர்.. கொடைகானல் ல எங்க போனாலும் வியூ பாயின்டுகளும் பள்ளத்தாக்குகளும் தான் இருக்கும் என்றார்.. தெரிந்தது தான். நிறைய முறை பார்த்துவிட்டதாலா அல்லது வெயில் படுத்திக்கொண்டிருந்ததாலா தெரியவில்லை.. சலிப்பாயிருந்தது.. மதியத்திற்கு மேல் நாங்கள் எங்கும் இறங்காமல் நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என்று சொல்லிக்கொண்டிருந்தோம்.. வெறுப்பான ட்ரைவர் பூம்பாறைக்கு வரீங்களா என்றார்..<br /><br />லிஸ்டில் இல்லாத இடம் என்பதாலேயே உடனே சரி என்றேன்.அது ஒரு சின்ன கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ ஒரு மலர் மலர்ந்திருப்பது போல அத்தனை அழகான மிகச்சிறிய ஊர். போகர் சித்தர் இரண்டு நவபாஷாண சிலைகள் செய்ததாகவும், ஒன்று பழநியிலும், ஒன்று இங்கும் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. இந்த சிலை இருக்கும் கோவில் மிகப்பழமையாக இருப்பினும் சுத்தமாக இருக்கிறது.. இந்த கோவில் உருவாகி அதை மையமாய் வைத்து வீடுகள் இருக்கின்றன.. பழநியில் இருக்கும் சிலை அபிஷேகங்களால் கரைந்துக்கொண்டிருப்பதாகவும் இங்கிருக்கும் சிலை வைத்தது போன்றே முழுதாய் இருப்பதாகவும் இங்கு இருப்பவர்கள் சற்று பெருமையுடனே சொல்கிறார்கள்..<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvTFMjuzadnHoaocnNb9x1yTGINFAcOKgQOItabmCjt0JGBv_Wfv-XQpD9No2PjXDMWD-SjSTVU4Gt2WyvdZ13W3XVFrb4CzCorl_mwfiGasoFhIE6bDH1KlPP8Ogvd-86TM_Gnw/s1600-h/poompaarai"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvTFMjuzadnHoaocnNb9x1yTGINFAcOKgQOItabmCjt0JGBv_Wfv-XQpD9No2PjXDMWD-SjSTVU4Gt2WyvdZ13W3XVFrb4CzCorl_mwfiGasoFhIE6bDH1KlPP8Ogvd-86TM_Gnw/s200/poompaarai" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450257384405140098" /></a><br /><br />நாங்கள் சென்ற நாள் பௌர்ணமி என்றும், வேறு ஏதோ நல்ல நாள் என்றும் சக்கரைப்பொங்கலும் பஞ்சாமிர்தமும் பெரிய பானைகளில் சமைத்துக்கொண்டிருந்தார்கள். சென்னையில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவர் தொலைபேசியில் இதையெல்லாம் கேட்டுவிட்டு, அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலமா.. ஐயோ பௌர்ணமி அன்னிக்கு போனீங்களா.. நான் பாடல் பெற்ற ஸ்தலம் எல்லாம் தேடி தேடி போறேன் எனக்கு இதெல்லாம் அமைய மாட்டேங்குது என்று கோபித்துக்கொண்டார்..<br /><br />எனக்கு இத்தனை மகத்துவம் புரியவில்லை.. ஆனால் ஏதோ வித்தியாசமான இடத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வு இருந்தது. எல்லா வீடுகளும் ஓட்டு வீடுகளாக இருக்கின்றன.. பக்கத்தில் பூண்டு செடிகள் கண்ணுக்கெட்டியவரை பரவிக்கிடக்கின்றன.. இவர்கள் முக்கிய விவசாயம் பூண்டு தான். பச்சை பூண்டை செடியோடு அன்று தான் முதல் முறை பார்த்தேன். வீட்டிற்குள் மூங்கில் கட்டைகள் கட்டி அதில் இந்த பூண்டி செடிகளை தொங்கவிட்டு புகைபோட்டு காயவைக்கிறார்கள். வேறு எப்படி காயவைத்தாலும் கெட்டுவிடுமாம் பூண்டு. இப்படி புகை போடுவற்காகவே மின்சார இணைப்பை உபயோகிக்காமல் இருக்கிறார்கள். ஒரு சில வீடுகளில் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. பூண்டு உரிக்க கூட சிரமபட்டுக்கொண்டு நம் மக்கள் ஜிஞ்ஜர் கார்லிக் பேஸ்ட் உபயோகிப்பதை நினைத்துக்கொண்டேன்.. <br />மலைவாழ் மக்களின் பேச்சும் வாழ்கையும் மிக எளிமையாக இருக்கிறது.. பொழுது சாயும் வரை அந்த கிராமத்தையே சுற்றி வந்துக்கொண்டிருந்தோம்.. அந்த இடம் தனக்குள் நிறைய ரகசியங்களை வைத்திருப்பது போலவும் அந்த அரை நாளில் அனைத்தையும் தெரிந்துக்கொண்டுவிட வேண்டும் எனவும் தோன்றிக்கொண்டே இருந்தது.. விடைபெறுகையில் நிறைய அன்பும் பழங்களும் பூண்டும் தந்தார்கள்.<br /> <br />அடுத்த நாள் குழந்தையின் பிறந்தநாள்.. டிராவல் டெஸ்க் மானேஜர் மூலமாக ரிஸார்டின் வேலை செய்பவர்களெல்லோருக்கும் தெரிந்துவிட்டது போலும். நாங்கள் ஆர்டர் செய்திருந்த கேக்கை ட்ரைவரே மூன்று கி.மீ தள்ளி இருந்த கடையிலிருந்து வாங்கி வந்து விட்டார். குறைந்தது 300 ரூ ஆகும் போகவும் வரவும். குழந்தை பிறந்தநாள் இல்ல.. அதான் என்றார் சிரித்துக்கொண்டே.. கேக் வெட்டுகையில் இருபது இருபத்தைந்து பேர் சேர்ந்திருந்தார்கள். பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.. <br /> <br />இனி மறுபடி எப்பொழுது பார்ப்போம் என்றே தெரியாத மக்கள் நடந்துக்கொண்ட விதமும், கனிவும், அக்கறையும் நெகிழச் செய்தது.<br /><br />“ Direct your gaze outwards to the great world of nature and see man in a living relationship to this great world” என்றார் சமூக சிந்தனையாளர் ருடோல்ப் ஸ்டீனர்..<br /><br />இயற்கையும், இயற்கை சார்ந்த மனிதர்களும், அழகும் ,குளுமையுமாய் கழிந்த என் மகளின் முதல் பிறந்தநாள் ஞாபக அடுக்குகளில் அழுத்தமாய் அமர்ந்துக்கொண்டது.. <br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-29749747.post-64543048714935476372010-01-08T15:52:00.005+05:302010-01-12T12:30:36.862+05:30பசித்த நகரத்தில் இருப்பவர்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBKA5doS_9NnYqo8MVFe3TOc_OjKSs2wAIOjNMJUQ9KUzbTnQsM-LkDBnZzUqfwgCGWRkMF1gVh8a_ltJqqk2hgxI_rInSYfWTttEPncTEx5KnfYCI4AC55rAEGiCHM49G9KS8Mw/s1600-h/Wedding%2520Topper.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBKA5doS_9NnYqo8MVFe3TOc_OjKSs2wAIOjNMJUQ9KUzbTnQsM-LkDBnZzUqfwgCGWRkMF1gVh8a_ltJqqk2hgxI_rInSYfWTttEPncTEx5KnfYCI4AC55rAEGiCHM49G9KS8Mw/s200/Wedding%2520Topper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424312726497689938" /></a><br /><br /><br />ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த <br />பெண்ணும்<br />பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த <br />ஆணும்<br />அருகருகே அமர்ந்திருந்தார்கள்<br /><br />ஆண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்<br />பெண் கூந்தலை சரி செய்தபடியிருந்தாள்<br /><br />ஆண் தன் தோரணை <br />கம்பீரமாயிருப்பதாய் காட்டிக்கொண்டான்<br />பெண் தன் அழகு <br />ஈர்க்கும்படியாய் பார்த்துக்கொண்டாள் <br /><br />ஆண் தொலைகாட்சியில் <br />கிரிக்கெட் பார்க்கத்துவங்கினான்<br />பெண் கடமைக்கென சமைத்தாள்<br /><br />உன்னுடனான காமம் சலித்துவிட்டது <br />என்றான் ஆண்<br />உன் முகம் பார்க்கவே அருவருப்பாயிருக்கிறது <br />என்றாள் பெண்<br /><br />மார்கழி பின்னிரவொன்றில்<br />நெஞ்சடைத்து இறந்து போனாள் பெண்<br />ஆண் பைத்தியமாகி அலையத்துவங்கினான்<br /><br />பாழடையத்துவங்கிய வீட்டின்<br />அலமாரியில் இருக்கின்றன<br /><br />ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த <br />பெண்ணின் பொம்மையும்<br />பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த <br />ஆணின் பொம்மையும்<br /><br />முத்தமிட்டபடி.<br /><br />-அனிதா<br /><br /><em>சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது</em>Unknownnoreply@blogger.com38tag:blogger.com,1999:blog-29749747.post-50947465709061592712010-01-01T22:17:00.002+05:302010-01-01T22:27:39.367+05:302010 - மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைய..2009 ஆண்டு வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இத்தனை வேகமாக, மகிழ்வாக ஒரு ஆண்டு இதற்கு முன் கழிந்ததாக நினைவில்லை. எட்டு மாத சூல் தாங்கி 2009 க்குள் நுழைகையில் நிறைய சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் மட்டுமே இருந்தன.. குழந்தை பிறக்கும்போது முதல் கவிதை தொகுப்பு கையில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருந்தேன்.. எங்கள் முதல் திருமண நாள் (24.2) அன்று குழந்தை பிறக்கவேண்டுமே என்றும் சின்ன (பெரிய்ய்ய) ஆசை.. முதலாவது நடந்தது. இரெண்டாவது சற்றே ஓவரான ஆசை என்பதால் கொஞ்சம் தள்ளி மார்ச் முதல் நாள் அனன்யா பிறந்தாள். <br /><br />காலம் காலமாய் வீல் என்று அலறிய உடனே குழந்தை பிறப்பதாய் பார்த்து பழகிவிட்டு இந்த பன்னிரெண்டு மணி நேர வலி பெரும் ஆபத்து வந்து விட்டதை போல பதற்றமுறச் செய்தது. விடியற்காலை நாலரை மணிக்கு வலி முற்றிலும் நின்றுவிட்டது.. பிறகு ஒரு அதிசயம் நிகழ்ந்தது.. முற்றிலும் இறங்கிவிட்டிருந்த என் வயிறு தானாக முறுக்கி குழந்தையை வெளியே தள்ளத்துவங்கியது.. யாரோ வயிற்றை பிடித்து கீழ் நோக்கி மெல்ல நீவுவதைப்போன்ற உணர்வு.. என் முழு உடலும் குழந்தையை வெளியே தள்ளுவதில் ஈடுபடத்துவங்கியது பார்த்து வியந்து போனேன். சீரான மெல்லிசை போல பதற்றமே இல்லாமல் அத்தனை அழகாக வலி இல்லாமல் அந்த கடைசி அரை மணி நேரம் ஆச்சர்யமானது. அந்த நொடிகளை முழுமையாக உணர்ந்து, ரசித்து, லயித்து,இத்தனை அழகானதா இந்த குழந்தை பேறு என்று இவளை மடியில் கிடத்தியபடி எழுதும் இந்நேரம் கூட சிலிர்த்துக்கொள்கிறேன்.. குழந்தை பிறந்ததுமே திரைக்கு அந்த பக்கம் பரிசோதித்த குழந்தை டாக்டர் " The baby can be with the mother now" என்றதும் அட நான்தான் நான்தான் என்று நினைத்துக்கொண்டேன். அரை மயக்கத்தில் செம சூப்பர் டாக்டர் நீங்க, சான்ஸே இல்ல.. சூப்பரா டெலிவரி பார்த்தீங்க என் குழந்த வந்துடுச்சு என் குழந்தை வந்த நேரம் தான் கலைஞர் உடம்பு சரி ஆகி வீட்டுக்கு போறாரு பாருங்க என்று சென்னை தமிழில் வாயில் வந்த பாராட்டையெல்லாம் பொழிந்துக்கொடிருந்ததும், ரொம்ப பேசறா இவ என்று டாக்டர் பொய் கோபம் காட்டியதும் ரெண்டு நாள் கழித்து சொன்னபோது கூச்சமாக இருந்தது.. நாம நினைச்ச மாதிரியே பொண்ணு பாப்பா பொறந்திருக்காடி என்று குரல் கம்மி தொண்டை அடைக்க என் கணவர் என் கைப்பிடித்துக்கொண்டபோது அந்த அறை எங்கள் மூவரையும் அரவணைத்துக்கொண்டது. <br /><br />இதோ இவள் நடக்கத்துவங்கிவிட்டாள். இந்த ஒரு வருடம் முழுக்க இலக்கியம் அலுவலகமெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அவளுக்காக திறந்திருக்கும் உலகத்திற்காக நிறைய நினைவுகளையும், புகைப்படங்களையும், அனுபவங்களையும், வீடு நிறைய சிதறிக்கிடக்கும் விளையாட்டு பொருட்களையும் சந்தோஷங்களையும் சேகரித்தபடியிருந்தேன்.<br /><br />சில உறவுகள் விலகிவிட்டதும், சில உறவுகள் நெருங்கி வந்ததும், பிரியாணிக்கு கத்திரிக்காய் சேர்வை (ஆற்காடு ஸ்பெஷல்) கற்றுக்கொண்டதும் இந்த வருடத்து இன்னும் சில இணைப்புகள்.<br /><br />நான் யாரென்றே கூட தெரியாவிட்டாலும் என் கவிதைகளுக்கு பின்னூட்டமிட்டும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி என்னை எழுதும்படி உற்சாகமூட்டியும் உரிமையுடன் அறிவுரை வழங்கும் நல்ல நண்பர்களுடன் இந்த 2010க்குள் நுழைந்திருக்கிறேன். மிக மகிழ்வான ஆண்டாய் இவ்வருடம் அனைவருக்கும் அமைய வாழ்த்துகள்.<br /><br />-அனிதாUnknownnoreply@blogger.com17