இதழ்கள்
கொஞ்சம் கவிதைகள்,நிறைய கனவுகள்
Wednesday, November 11, 2009
நான் மட்டும்
திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்
திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)