Monday, March 04, 2013

அதுவே கடைசி

கிளைகள் பரப்பிய பெருமரமாகத்தான் அறிந்திருந்தேன்
அத்தனை வளமாய்
பேராதிக்கமாய்
சலனமற்ற பார்வையோடு
கடந்துவிடமுடியாதபடியாய்.

இப்பொழுதும்
அங்கேயேதான் இருக்கிறது மரம்
எனினும் கடைசி பறவை
தன் கூட்டை சுமந்தபடி பறந்துச்சென்று
நாளாகிறது.

No comments: