
எப்படி தேடினாலும் கிடைப்பதில்லை சில தடயங்கள்.
காய்ந்த சருகுக்குவியலின் மேல்
சற்றுமுன் ஒரு இலை உதிர்ந்ததற்கோ
பூட்டிய பூங்காவின் ஊஞ்சல்களில்
குழந்தைகள் ஆடிவிட்டு போனதற்கோ
குறுஞ்செய்திகளில் தகித்து கழிந்த
மிரட்சியான இரவுகளுக்கோ
பின் அட்டை தெரிய கிடக்கும்
இப்புத்தகத்தை வாசித்து முடித்ததற்கோ
அடைக்கபட்டிருக்கும் கதவுகளேல்லாம்
முன்னெப்போதோ
விலாசமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ
எந்த தடையங்களும் இருப்பதில்லை.
இருந்தும் அழிக்கவியலாமல் தேங்கிவிடுகின்றன
சில நினைவுகள்
சில தேதிகள்
சில குற்றவுணர்வுகள்