Sunday, August 09, 2015

காலங்களை கடப்பவள்..

புதிய நாட்காட்டியின் தாள்களை
ஒவ்வொன்றாய் கிழித்துக்கொண்டிருந்த குழந்தை
இன்றை கடந்து நாளைகளை கிழிக்கத்துவங்கியதும்
மெல்ல புன்னகைக்கிறாள்.

மாற்றம்

அமரர்களாகவே நிலைத்திடவேண்டி
தேவர்கள் துவங்கிய யாகத்தில்
செங்கற்கள் அடுக்கி விறகுகள் குவித்து
மாவிலையால் நெய் ஊற்றி
ஓங்கி வளர்ந்த அக்னிதேவனுக்கு
ஒரு சீப்பு வாழைப்பழத்தையும்
பட்டுப் புடவையொன்றையும்
லாவகமாய் படைத்த நொடியில்
தேவர்கள் அசுரர்களாக மாறிவிட்டார்கள்.