நான் மட்டும்
திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்
திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.
திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்
திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.
Posted by
அனிதா
at
1:35 PM
|
8
கருத்துக்கள்
குழந்தையின் இசைக்கருவியில்
விதம்விதமாய் மிருகங்கள்
பொத்தான்களை அழுத்துகையில்
அதனதன் குரலில் பாடும்
நிறங்களும் சப்தங்களும்
அவள் சின்ன விரல்களை
சலிக்காமல் ஈர்க்கும்
அவள் உறங்கியதும்
பொத்தான் களை ஒவ்வொன்றாய் கழற்றி
மாற்றி மாற்றி பொருத்தினேன்.
மாடு கனைப்பதையும் வாத்து குரைப்பதையும்
பார்க்க பயமாயிருக்கிறது.
Posted by
அனிதா
at
6:05 PM
|
7
கருத்துக்கள்
நிகழ்ந்த நொடியில்
வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டன
அடிபட்டவனை சுற்றி
ஆனவரை கூட்டம் சேர்ந்தது
அதிர்வலைகள் பரவி
என்னை வந்து சேர்ந்தபோது
இறந்துவிட்டான் என்றார்கள்
ஆம்புலன்ஸில் ஏற்றும்போது
பரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்
கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றிய
என் வாகனத்தின் டயர் பழுதாகியிருக்குமோவென
கவலைப்படத் துவங்கினேன்.
Posted by
அனிதா
at
4:32 PM
|
6
கருத்துக்கள்
வெளியூரில் இருக்கும் தாத்தாவை
மறந்துவிடாமல் இருக்க
தினம் புகைப்படம் காட்டி
பழக்குகிறாள் அம்மா
ஊருக்கு வந்தபோது
புகைப்படம் நடமாடுவதை கண்டு
மிரண்டதிர்ந்து அழுகிறது குழந்தை.
Posted by
அனிதா
at
4:14 PM
|
4
கருத்துக்கள்
ரயிலில் ஏறியதுமே குதூகலிக்கிறாள் குழந்தை
தொண்டைக்குள் நீர் தேக்கி
கர்ர்ர் என்று சப்தமிடுகிறாள்
நொடி நேரமும் கையில் அடங்காமல்
இங்கும் அங்கும் தாவ முயல்கிறாள்
இல்லாத யாரையோ கண்ணாடி ஜன்னல் வழியே
சலிக்காமல் அழைக்கிறாள்
கடந்து செல்பவர்கள் புன்னகைத்துப் போகிறார்கள்
சிலர் எட்டி கன்னம் கிள்ளுகிறார்கள்
சிரித்துவிட்டு பதில் சிரிப்புக்காய் காத்திருக்கிறார்கள்
அடக்கவியலா பெருமிதத்தோடு
ரயிலின் தாளம் பழகியவளாய்
குழந்தைக்கு ஆடை மாற்றி பால் புகட்டி
அவளுக்குள்ளேயே மூழ்கியிருக்கிறேன்
இவ்வளவு சலனங்களுக்கும் சற்றும் நிமிறாமல்
புத்தகம் படிக்கிறாள்
எதிர் இருக்கையில் இருப்பவள்
என் கவன ஈர்ப்பு செய்கைகளெல்லாம்
குழந்தையை தாண்டி அவளுக்காய்
மாறத்துவங்கிய நிமிடத்திலிருந்து
புத்தகங்களுக்குள் ஊறிக்கொண்டிருந்த நாட்களில் ரசித்த
குழந்தைகளின் முகங்களை நினைவுகூற முயன்றுக்கொண்டிருக்கிறேன்
இந்த நிமிடம் வரை.
Posted by
அனிதா
at
5:57 PM
|
10
கருத்துக்கள்