Sunday, August 09, 2015

மாற்றம்

அமரர்களாகவே நிலைத்திடவேண்டி
தேவர்கள் துவங்கிய யாகத்தில்
செங்கற்கள் அடுக்கி விறகுகள் குவித்து
மாவிலையால் நெய் ஊற்றி
ஓங்கி வளர்ந்த அக்னிதேவனுக்கு
ஒரு சீப்பு வாழைப்பழத்தையும்
பட்டுப் புடவையொன்றையும்
லாவகமாய் படைத்த நொடியில்
தேவர்கள் அசுரர்களாக மாறிவிட்டார்கள்.

No comments: