அமரர்களாகவே நிலைத்திடவேண்டி
 தேவர்கள் துவங்கிய யாகத்தில்
 செங்கற்கள் அடுக்கி விறகுகள் குவித்து
 மாவிலையால் நெய் ஊற்றி
 ஓங்கி வளர்ந்த அக்னிதேவனுக்கு
 ஒரு சீப்பு வாழைப்பழத்தையும்
 பட்டுப் புடவையொன்றையும் 
 லாவகமாய் படைத்த நொடியில்
 தேவர்கள் அசுரர்களாக மாறிவிட்டார்கள்.
No comments:
Post a Comment