Tuesday, February 13, 2007

என் ஒழுங்கின்மையின் நுணுக்கங்களை
சோதித்துக் கொண்டிருந்தப் புத்தகத்தை
மூடிய வேகத்தில் சிதறித்தெறித்தன‌
சில முளைக்கட்டிய விதைகள்.
தலையணைக்குள் முகம் புதைத்து
காயத்துவங்கியிருந்த விதைகளை
நெருடிக்கொண்டிருந்தேன்.
ஜ‌ன்ன‌லின் வெளியே
அன‌ல்காற்றின் சுழ‌ற்சியில்
இடைவ‌ளைத்து சுழ‌ன்றுக்கொண்டிருந்த‌து
சூல்தாங்கி ஓங்கி வ‌ள‌ர்ந்த‌
ச‌ற்று முன் இருந்திராத‌
அந்த‌ ம‌ர‌ம்.

No comments: