Wednesday, February 07, 2007

காமம் குழைத்துப் பூசிய‌
என் மூளைச்சுருக்கங்களிலிருந்து
ஒவ்வொன்றாய் உதிரத்துவங்குகின்றன‌
மலரின் ஸ்பரிசமும்
தனிமையின் நிச்சலனமும்
மரணத்தின் இயல்பும்.
சில கூரிய வாஞ்சைகளின்
முடுச்சுக்கள் இளகியதும்
பக்கு பக்காய் உதிர்ந்துவிட்டிருந்தது
என் காமமும்.

No comments: