Tuesday, February 12, 2008

இரு க‌விதைக‌ள்



ஏனென்றால்


ஊற‌ப்போட்ட‌ அரைம‌ணியில்
துவைத்து உல‌ர்த்திவிட்டேன்
திர‌ண்டு வ‌ரும் மேக‌ம் எந்நேர‌மும்
கொட்ட‌த்துவ‌ங்கும்

அல்ல‌து ச‌ட்டென‌ க‌லைந்தும் போக‌லாம்
ச‌தை துளைக்கும் வெயில் இற‌ங்கி
ஈர‌ம் உறிந்து வெளுக்க‌டிக்க‌லாம்

எத்த‌னை அழைத்தும் கீழிற‌னங்காம‌ல்
மொட்டைமாடியிலேயே அம‌ர்ந்திருக்கிறேன்

கார‌ண‌ங்க‌ள் கோர்த்தே ச‌க‌ல‌மும் செய்யும் என்
தோழிக‌ளுக்கு ம‌ட்டும் சொல்கிறேன்
வாக‌ன‌ப் புகையில் திண‌றித் த‌ப்பித்த‌ காற்று
வ‌றுத்த‌ க‌ட‌லை வாச‌ம் சும‌ந்து
என் துணிக‌ளை முத‌லில் உல‌ர்த்த‌
இப்போது வ‌ரும்



என் ம‌க்க‌ள்


விள‌ம்ப‌ர‌ப் ப‌ல‌கைக‌ளை
வாய் பிள‌ந்து வெறித்த‌ப‌டி ந‌க‌ர்கிற‌து
இந்த‌ ம‌ழைப்ப‌ய‌ண‌ம்

கூரைத் தொட்டு துருக்க‌ம்பிக‌ளில் வ‌ழிந்து
தொடைந‌னைக்கும்
ஜ‌ன்ன‌லோர ஈர‌ம் உத‌டு சுழிக்க‌ச்செய்கிற‌து

மிக‌மெல்லிய‌ இசையாலும் குறைக்க‌
முடிய‌வில்லை
அக‌ண்ட‌ தோள் சாய்ந்து ம‌ழை ர‌சிக்கும்
முன்னிருப்ப‌வ‌ள் மீதான‌ துவேஷ‌த்தை

ப‌ய‌ண‌ச்சீட்டை மோதிர‌ இடுக்கில் சொருகி
இருந்த‌வ‌ளின்
ப‌ட்டைச்ச‌ரிகைக்கு பொருந்தாத‌
நிற‌க்க‌ல‌வைப்ப‌ற்றி
சொல்ல‌லாமென்றிருந்த‌போது

ம‌ண‌ற்சூடு அட‌ங்காத குறுகியத்
தெருமுனையில்
ந‌லுங்காம‌ல் இற‌க்கிவிட்டு
ம‌ற்ற‌ங்க‌ளின்றி ப‌ய‌ணிக்கிறார்க‌ள்
இத்த‌னை நேர‌மும் த‌னிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த‌

என் ம‌க்க‌ள்


ந‌ன்றி : புதிய‌ காற்று

6 comments:

Ken said...

இன்னும் நிறைய சிற்றிலக்கிய இதழ்களில் எல்லாம் உங்கள் படைப்புகள் வெளிவர
வாழ்ததுகள்

Rams said...

Itz amazing...

RS

anujanya said...

'ஏனென்றால்' அருமை. அடுத்த கவிதையில் 'மற்றங்களின்றி' என்று வந்துள்ளது. 'மாற்றங்களின்றி' என வரவேண்டுமோ ! அல்லது எனது புரிதலின் எல்லையைத் தொட்டுவிட்டேனோ !

அனுஜன்யா

காலம் said...

இன்னும் ரணங்களிலிருந்து எழும்பவில்லை உங்கள் சூரியன் என்றே தோன்றுகிறது

நெருப்பாற்றை ஒரு கட்டுமரங்கொண்டு கடக்கின்ற வாழ்வு

அலுவலக்த்தின் கேண்டினில் ஒளிந்து கொண்டிருக்கும் சுவராசியங்களின் முனகல்

நெருக்கடிகள் குவித்து தின்று துப்பும் அலுவலக கதவுகளில் ஒட்டியிருக்கும் உங்கள் சதை துனுக்குகள்

எதிர்பார்க்கவைத்துவிடீர்கள்

எழுதுங்கள் காத்திருக்கிறேன்

காலம் said...

உங்களுடைய மொழியில் யாரோ பிய்த்து எடுத்துப்போய்விடுகிறார்கள்
திடீரென்று
கொஞ்சமாகவேனும்

யாரது

Lakshmi Sahambari said...

:-))))))))))))))