Monday, July 14, 2008

பஸ் ஸ்டேண்ட் அழகிகள்

இருளின் பயமின்றி
தனியே நிற்பவளை கடந்து
என் பேருந்திற்காய் காத்திருக்கிறேன்

துணிகள் திணித்த பெரும் பை சுமந்தபடி
மினுக்கும் உடைகளைத் தவிர்த்து பார்வை தாழ்த்தி
உதட்டுசாயம் துடைத்து நிற்கையில்
சற்றே ஆசுவாசமாகிறேன்
அவளிடமிருந்து வேறுபட்டிருப்பதாய்.

கண்களில் காமம் தளும்புவதாயும்
உதடு சுழித்து அழைப்பதாயும்
அரையிருட்டில் அனுமானிப்பது
அருவருப்பாயிருக்கிறது

முகம் சுருக்கி பேருந்தில் அமர்கிறேன்.
பெரும் தேவைகள் ஏதுமற்ற கசகசப்பில்
உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்.

-அனிதா

4 comments:

MSK / Saravana said...

"உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்."

உங்கள் கவிதைகள் எப்போதும் வித்தியாசமான உருவகங்களோடு இருக்கின்றன..

:)

நளன் said...

கலா ப்ரியா, மால‌தி மைத்ரி,சல்மா வரிசையில் அப்புறம் நீங்க..
யதார்தமா ஆழமா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்.

சூர்யா - மும்பை said...

கவிதை படிப்பது என்பதீ சுகமான அனுபவம் பெரும்பாலும். உங்கள் கவிதைகளை முதன் முறையாய்ப் வாசிக்கிறேன். முதல் உணர்வு. மென்மையாகவும், ஆனால் ஒரு அழுத்தமான ஊடு பொருலோடு ஒரு சுகமான அனுபவமாய் இருக்கிறது.
கிட்டத்தட்ட முகுந்தின் கவிதைகள் போல்.ஒப்புமையாய்க் கருத வேண்டாம்.

மேலும் படித்து விட்டு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
சூர்யா.

கே.பாலமுருகன் said...

தொடரட்டும் முயற்சி. புனைவு அருமை. நவீன தாக்கமும் மனநிலையும் பிரதிபலிக்கிறது.

கே.பாலமுருகன்
மலேசியா