Wednesday, January 11, 2012

என்றைக்குமில்லாமல்.



இன்று இந்த நிலவு
இத்தனை பெரியதாக இருக்கிறது

வேறெங்கும் திரும்பிவிட முடியாதபடி
தரையெங்கும் வெளிச்சம் பரவ
என்னை நெருங்கிக்கொண்டேயிருக்கிறது.

உன் அன்பை போலவே
இன்று இந்த நிலவு
இத்தனை குளிர்ச்சியாயிருக்கிறது

-அனிதா

6 comments:

பொன். வாசுதேவன் said...

அருமை.

நட்புடன் ஜமால் said...

தினம் தோன்றும் மந்திரம் இது

"என்றைக்குமில்லாமல்"

Motorsundaram pillai said...

wow anbu nila

-ganeshkj said...

நீண்ட நாள் கழித்து உங்களுடைய blog-ல் மீண்டும் கவிதைகள் வாசிக்கிறேன். மகிழ்ச்சியாயிருக்கிறது, அனிதா. வாழ்த்துக்கள்.

sundar said...

எளிமையாய் இருந்தாலும் அழகான கவிதை

MSK / Saravana said...

ரொம்ப பிடிச்சிருக்கு.. :)