Wednesday, October 10, 2007

பெங்களூரு புத்தக கண்காட்சியில் உயிர்மை..

பெங்களூருவில் அக்டோபர் 12 ல் துவங்கி 21 வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகமும் இதில் பங்கேற்கிறது.

உயிர்மை பதிப்பகம் கடந்த நான்கு ஆண்டுகளில் கதைகள், நாடகங்கள், கவிதைகள் என பல்வேறு சுவைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

நவீன தமிழ் எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, கி.ராஜநாராயணன், தியோடர் பாஸ்கரன் மற்றும் பலரின் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன.

உயிர்மை பத்திரிக்கையின் ஐம்பதாவது இதழுக்கும், கரிசல் விருது பெற்றமைக்கும், புத்தக கண்காட்சி சிறப்பாய் நடக்கவும் வாழ்த்துகள்!!!


பெங்களூரு புத்தக கண்காட்சி 2007

தேதி: அக்டோபர் 12 லிருந்து 21 வரை
நேரம்: காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை
ஸ்டால் எண் : 163
இடம்: PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

உயிர்மையின் புத்தக பட்டியல் விவரங்களை இங்கு காணுங்கள்.

- அனிதா

No comments: